×

மதுக்கடை அருகே நின்றிருந்த பாஜக மாவட்ட நிர்வாகி சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மதுக்கடை அருகே நின்றிருந்த பாஜக மாவட்ட நிர்வாகி கவுரவ் ஜெய்ஸ்வால் என்பவர் மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்ட பாஜக நிர்வாகியும், வழக்கறிஞருமான கவுரவ் ஜெய்ஸ்வால், நேற்றிரவு சிருஹா வார்டுக்கு அருகில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். இவர், நகராட்சி தலைவர் கிருஷ்ணகோபால் ஜெய்ஸ்வாலின் மருமகன் ஆவார். இந்நிலையில் கடைக்கு முன்னால் நின்று கொண்டிருந்த கவுரவ் ஜெய்ஸ்வாலை, அங்கு வந்த இருவரில் ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், துப்பாக்கியால் சுட்ட இருவரை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கவுரவ் ஜெய்ஸ்வாலை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். தகவலறிந்த போலீஸ் எஸ்பி பிரதீப் குப்தா, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலைக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ேபாலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்….

The post மதுக்கடை அருகே நின்றிருந்த பாஜக மாவட்ட நிர்வாகி சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Lucknow ,Gaurav Jaiswal ,Uttar Pradesh ,
× RELATED இந்திய மக்கள் மாற்றத்தை...